வெளிநாட்டு ஊழியர்கள் லாரி விபத்து: மேலும் ஒரு ஊழியர் மரணம்!

2nd migrant worker dies after PIE lorry accident
(Photos: ItsRainingRaincoats / FB and MWC)

பான்-தீவு அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி லாரி மற்றும் டிப்பர் லாரி இடையே விபத்து ஏற்பட்டது, இதில் இரண்டாவது வெளிநாட்டு ஊழியர் தற்போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர், இந்த விபத்தில் சிக்கிய 33 வயதான வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஊழியர்களை நம்பியுள்ள சிங்கப்பூர் நிறுவனங்கள்… சிரமத்தை எதிர்நோக்கும் பயணங்கள்

தோஃபஸல் ஹொசைன் (Tofazzal Hossain) என்ற ஊழியர் இன்று ஏப்ரல் 23 காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வெளிநாட்டு ஊழியர் நிலையம் (MWC) தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

தற்போது அவரது தாயார் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருவதாகவும் அது கூறியுள்ளது, தாயார், மனைவியுடன் தொடர்பு கொண்டுள்ளதாக கூறியுள்ள MWC, உதவி வழங்குவதாகவும் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் Westlite Woodlands தங்கும் விடுதியில் 11 ஊழியர்களுக்கு தொற்று