பறந்து! பறந்து! சோர்ந்துபோன புறா ஒன்று ஓய்வெடுக்கும் விதமாக நார்த் பிரிட்ஜ் ரோடு வழியாக சென்று கொண்டிருந்த காரில் அமர்ந்து பயணம் செய்தது.
வீடியோவில் பதிவான இந்தச் சம்பவம், Singapore Wildlife Sightings ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. இந்த வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கட்டுப்பாடுகளை நீக்கவும் முடியாது… ‘Zero-Covid’ திட்டத்திற்கு செல்லவும் முடியாது – சிங்கப்பூர்
ரோல்ஸ் ராய்ஸில் முன்பகுதியில் அமைந்திருக்கும் “ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி” ஹூட் அழகுப்பொருள் போன்று அந்தப் புறா அமர்ந்து வந்தது.
அந்த பதிவின் படி, வீடியோவில் புறாக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இறுதியில் காரை நிறுத்திய ஓட்டுநர், அந்த புறாவை துரத்தி பறக்க செய்ததாகவும் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த காணொளி நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.