வெளிநாட்டு பணிப்பெண் குளிக்கும் போது ரகசிய கேமரா பொருத்தி படமெடுத்த ஆடவருக்கு சிறை!

சிங்கப்பூரில் தனது வீட்டுப் பணிப்பெண் குளிப்பதை படம் எடுக்கும் நோக்குடன் கழிப்பறைக் கதவின் அடியில் பின்ஹோல் கேமராவைச் செருகிய ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

78 வயதான அந்த ஆடவர், 24 வயதான பணிப்பெண் குளிப்பதை படம் எடுக்க போர்ஸ்கோப் கருவியை வாங்கியுள்ளார்.

அட்டையில் ஒரு எடை, உண்மையில் வேறு எடை… NTUC FairPrice பொருளின் அதிக விலையை தோலுரித்து காட்டிய பெண்!

இந்நிலையில், அந்த ஆடவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நான்கு முறை இந்த தவறான செயலில் ஈடுபட்டதாக குற்றத்தை அவர் ஒப்புக்கொண்ட பிறகு தண்டனை வழங்கப்பட்டது.

போர்ஸ்கோப் என்பது ஒரு ஒளியியல் கருவியாகும், இது குறுகலான, உள்நுழைய கடினமாக இருக்கும் துவாரங்களை வழியே இலகுவாக செல்லும்.

இது போன்ற குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

50 வயதுக்கு மேல் உள்ளவராக இருந்தால் பிரம்படி விதிக்க முடியாது.

வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் மீது குற்றம் இழைக்கப்பட்டால், அதிகபட்ச தண்டனையை விட இரண்டு மடங்கு தண்டனையை அனுபவிக்க நேரிடலாம்.

காணாமல் போன சுற்றுலா விமானம்… ஐஸ்லாந்தில் ஏரியின் கீழே கண்டெடுப்பு – பயணம் செய்த பல்வேறு நாட்டவரின் நிலை?