சிங்கப்பூர் பயனியர் சாலை நார்த்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை (மார்ச் 25) 3 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 56 வயதுடைய ஆடவர் ஒருவர் லாரியின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டார்.
காலை 8.35 மணியளவில் பயனியர் சாலை மற்றும் ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 5 சந்திப்பில் இரண்டு லாரிகள் மற்றும் கார் விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விபத்து தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது, அதில் பெரிய லாரி ஒன்று சாலை நடு தடுப்பின் மீது கவிழ்ந்து கிடப்பதை காணமுடிந்தது.
அதே போல, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) துணை மருத்துவர்களும் அதிகாரிகளும், லாரி முன்பக்கத்தில் ஒருவரை காப்பாற்றுவதை வீடியோக்களில் காணலாம்.
ஓட்டுனர் இருக்கையில் சிக்கிய நபர், ஹைட்ராலிக் மீட்பு கருவி மூலம் மீட்கப்பட்டர். பின்னர், அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறினர்.
VTL விமானங்கள் தேவையில்லை… அனைத்து பயணிகளும் ஏப்ரல் 1 முதல் தனிமையின்றி சிங்கப்பூர் வரலாம்!