புரூணையில் உயரிய விருதை பெறவுள்ளார் சிங்கப்பூர் “பிரதமர் லீ”

Ministry of Communication & Information

பிரதமர் லீ ஹிசியன் லூங் மற்றும் அவரது மனைவி ஹோ சிங் ஆகியோர் புரூணையில் விருதுகளைப் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று வியாழன் (ஜூலை 14) முதல் வரும் சனிக்கிழமை வரை புரூணைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

சிங்கப்பூரில் வேலையில் உள்ள தமிழ் ஊழியர்… சொந்த வீட்டில் நடந்த கொடுமை – சோகத்தில் குடும்பம்

புரூணையின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா முயிஸாதின் வத்தௌலாவின் 76வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக திரு லீ, புரூணை செல்வதாக செய்திகள் வெளியாகின.

​​மிகவும் மதிப்பிற்குரிய “The Most Esteemed Family Order” என்ற விருதை திரு. லீ பெறுவார் என்று பிரதமர் அலுவலகம் (PMO) இன்று தெரிவித்துள்ளது.

அதே போல, பிரதமர் மனைவி திருமதி ஹோ “The Most Distinguished Order of Paduka Seri Laila Jasa” என்ற மிகவும் சிறப்பு வாய்ந்த விருதை பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேலும் குரங்கம்மை தொற்று பாதிப்பு – பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டவர்