சிங்கப்பூரில் 11 வயது சிறுமியை மூன்று நாட்களாக காணவில்லை

missing girl singapore
SPF

சிங்கப்பூரில் 11 வயது சிறுமியை மூன்று நாட்களாக காணவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காணாமல் போன சிறுமியை பற்றி தெரிந்தால் தகவல் தருமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பணத்தை காவலர்கள் திருடியதாக போலி நாடகம்: “வினேஷ் குமார் கணேசன்” என்பவருக்கு அபராதம், சிறை

நூர் நஃபஸ்யா நூர் முகமது என்ற அந்த சிறுமி கடைசியாக 30 டிசம்பர் 2021 அன்று பொங்கோல் செட்டில்மென்ட் (Punggol Settlement) என்ற உணவு&பான கடைக்கு அருகில் காணப்பட்டார் என்று போலீசார் இன்று (ஜனவரி 2) தெரிவித்தனர்.

தகவல் தெரிந்த நபர்கள் 1800 255 0000 என்ற காவல்துறையின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், ஆன்லைனிலும் தகவலை அளிக்கலாம். கண்டிப்பாக அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் மரணம்: இந்திய ஊழியர் மீது கொலை குற்றச்சாட்டு – முழு தகவல்