சிங்கப்பூரில் 11 வயதுமிக்க சிறுவனை மூன்று நாட்களாக காணவில்லை என்று போலீசார் தகவல் கூறியுள்ளனர்.
பி. ஆகாஸ் (P Akhash) என்ற அந்த சிறுவன் கடைசியாக, ஹௌவ்காங் அவென்யூ 7ல் கடந்த திங்கட்கிழமை அன்று காணப்பட்டதாக போலீசார் கூறினார்.
ஆயுதம் ஏந்தி தைரியமாக இருவரை தாக்கிய 2 பேர் (Video) – தேடுதல் வேட்டையில் போலீஸ்
சிறுவனை பற்றி தகவல் தெரிந்தால், அல்லது எங்கேனும் கண்டால் தகவல் தரும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.