சிங்கப்பூரில் இரண்டு வாரங்களாக 14 வயது சிறுமியை காணவில்லை – தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள்

SPF

சிங்கப்பூரில் இரண்டு வாரங்களாக 14 வயது சிறுமியை காணவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அந்த சிறுமி குறித்த தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“உழைப்பு நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை” – இதைக்கேட்டு நிறுவனத்தின் 20 கோப்புகளை நீக்கிய ஊழியருக்கு அபராதம்!

காய் சின் ஹுய் வலிரி (Cai Xin Hui Valerie) என்ற அந்த சிறுமி, கடைசியாக நவம்பர் 22 அன்று இரவு 10.30 மணியளவில் ஹௌகாங்கில் உள்ள லோரோங் நாபிரியில் (Lorong Napiri) காணப்பட்டதாக செய்தி வெளியீட்டில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தகவல் தெரிந்தால் 1800 255 0000 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இல்லையென்றால், ஆன்லைனில் தகவலை சமர்ப்பிக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதக் குழுக்களின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 9 ஆடவர்கள் கைது