சிங்கப்பூரில் பெண்மணி ஒருவரை காணவில்லை என போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
24 வயதான திருமதி நூர் ஜூலியானா பிண்டே அஹ்மத் ஜொஹான், எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல் தெரிந்தவர்கள் அதனை தெரிவிக்கும்படியும் போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
அவர் கடைசியாக, பிளாக் 436 யுஷுன் அவென்யூ 11க்கு அருகில் காணப்பட்டார் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.