சிங்கப்பூரில் வீண் வேலையில் ஈடுபட்டு பிடிபட்ட 49 பேர்

police-arrest-49-men Sentosa
CNB

செந்தோசா தீவில் உள்ள ஹோட்டல் வில்லாவில் இருந்த 49 ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆக. 9 ஆம் தேதி அன்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கார் இரண்டாக பிளந்து விபத்து – 26 வயதுமிக்க இளைஞர் மரணம்

அவர்களில் 35 பேர் சிங்கப்பூரர்கள் என்றும், 21 முதல் 46 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது

சிங்கப்பூர் அரசால் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள் அந்த வில்லாவில் காணப்பட்டன.

சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் குற்றங்களுக்காக அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவும் (சிஎன்பி) வரவழைக்கப்பட்டது.

தனிப்பட்ட அரட்டைக் குழு மூலம் இந்த பார்ட்டிக்கு அவர்கள் ஏற்பாடு செய்ததாக CNB கூறியது.

கைது செய்யப்பட்ட அனைவரிடமும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

குழந்தைகளை பிரிந்து வாடுவதாக கவலை கொண்ட வெளிநாட்டு ஊழியர் – “உங்களால் தான் இன்று சிங்கப்பூர்” அன்பளிப்பு வழங்கிய சிங்கப்பூரர்