கடையில் ஆயுதத்துடன் தைரியமாக கொள்ளை… CCTV காட்சிகளை வைத்து பிடித்த போலீஸ்

Police arrest man armed robbery
Photos via Singapore Police Force

பாசிர் ரிஸ் பகுதியில் ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 31 வயதுடைய ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிப்ரவரி 1, 2023 அன்று அதிகாலை 1.50 மணியளவில், பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 11ல் உள்ள மினிமார்ட்டில் ஆயுதமேந்திய கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் கிடைத்தது.

Toto Hong Bao குலுக்கல்: S$12 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய 3 பேர்!

கத்தியுடன் இருந்ததாக கூறப்படும் அவர், கடையில் உள்ள ஊழியரிடம் பணத்தைத் தருமாறு மிரட்டியதாக முதற்கட்ட விசாரணையில், தெரியவந்துள்ளது.

நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், CCTV காட்சிகளின் அடிப்படையில் அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து, புகார் கிடைத்த 18 மணிநேரத்துக்குள் கைது செய்தனர்.

இதனை அடுத்து அவரிடம் இருந்து S$276 ரொக்க பணம், ஒரு கத்தி, உடைகள் மற்றும் உடமைகள் கைப்பற்றப்பட்டன.

ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த குற்றத்திற்காக அந்த நபர் மீது நேற்று பிப்ரவரி 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க் கடலில் அதிகாலையில் கிடந்த சடலம்: இறந்தது உறுதி