பொங்கோல் உணவகத்தில் பெண் ஊழியரை தள்ளி விட்டு, தட்டை உடைத்து தகராறு… வீடியோ வைரல் – போலீஸ் விசாரணை

Police investigating Punggol fight

பொங்கோலில் உள்ள உணவகம் ஒன்றில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இன்று (மார்ச் 14) போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமையன்று Tebing லேனில் ஏற்பட்ட அந்த தகராறு சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் போலீஸ் (SPF) கூறியது.

சிங்கப்பூரில் கடல் பயணத்தை அனுபவித்தது உண்டா? – 24 பேர் செல்லும் படகு வாடகை – மீன், BBQ என மகிழ்ச்சியாக கழிக்கலாம்!

Tebing லேனில் அமைந்துள்ள Fat Po என்ற உணவகத்தில் இரண்டு ஆண்கள் முரட்டுத்தனமாகவும், பகைமைப் போக்குடனும் நடந்துகொண்டதாக பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான அந்த பதிவில், ஆடவர் ஒருவர் தனது மேசையில் புகைபிடித்ததாகவும், அதற்கு ஊழியர் புகைபிடிக்க இங்கு அனுமதி இல்லை என்று அவரிடம் சொல்ல முயன்றபோது, ​​​​அதனை அவர் காதுகளில் வாங்காமல் பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

பின்னர், அவர்களில் ஒருவர் தட்டை தரையில் தூக்கிப்போட்டு அடித்து நொறுக்கியதாகவும், இன்னொருவர் பெண் ஊழியர் ஒருவரைத் தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்களை பிடித்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு ஊழியர்கள் செல்லும் லாரிகளில் கட்டாய அம்சங்கள் – “இருந்தாலும்…” என்று முணுமுணுக்கும் கட்டுமான நிறுவனங்கள்!