சிங்கப்பூரில் திருட்டு குற்றச்சாட்டில் ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 13ஆம் தேதி அங் மோ கியோ MRT நிலையத்திற்கு அருகில் உள்ள வீடுகளை உடைத்து திருடியது தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவ அவர் தேடப்பட்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.
யாருக்கேனும் தகவல் தெரிந்தால் 1800-255-0000 என்ற காவல்துறையின் ஹாட்லைன் எண்ணை அழைக்கும் படி அது கேட்டுக்கொண்டது.
வேறு வழியில், www.police.gov.sg/iWitness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்.