சிங்கப்பூரில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஆண் மற்றும் பெண் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பிளாக் 424 ஆங் மோ கியோ அவென்யூ 3ல் கடந்த பிப்ரவரி 14 அன்று திருட்டு தொடர்பான புகார் ஒன்று பதிவானது. அது தொடர்பாக அவர்கள் தேடப்படுகின்றனர்.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கலாம்.
இல்லை என்றால் அதற்கு மாற்றாக, உங்களின் தகவல்களை www.police.gov.sg/iwitness என்னும் ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர்.
தங்கும் விடுதி, கட்டுமான துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!