சிங்கப்பூரில் பெண் ஒருவரை தேடிவரும் போலீசார் – தகவல் தெரிந்தால் கூறும்படி கோரிக்கை

Police looking for woman Nex

சிங்கப்பூரில் வழக்கு விசாரணை ஒன்றன் தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

கடந்த மாதம் பிப்ரவரி 19 அன்று நெக்ஸ் மாலில் அளிக்கப்பட புகாரின் அடிப்படையில் அவர் தேடப்பட்டு வருகிறார்.

பெண்ணை சீரழித்து, அடித்து தாக்கி சாலையில் போட்டுச்சென்ற இரு வெளிநாட்டு ஊழியர்கள் – நீதிமன்றத்தில் ஆஜர்

அதாவது, அவர் அங்கு சொத்துக்களை நேர்மையற்ற முறையில் கையகப்படுத்தியதாக போலீசார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அந்த வழக்கு விசாரணைக்காக பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கலாம்.

இல்லை என்றால் அதற்கு மாற்றாக, உங்களின் தகவல்களை www.police.gov.sg/iwitness என்னும் ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு