புதுவை முதலமைச்சர் நாராயணசாமி நாளை புதன்கிழமை (அக்ட்., 6 ) அரசு முறை பயணமாக சிங்கப்பூர் வர இருக்கிறார்.
இந்த அரசு முறை பயணத்தில் 4 நாட்கள் சிங்கப்பூரில் நாராயணசாமி தங்குவார் என்று கூறப்படுகிறது. அச்சமயம் தொழில்முனைவோரை சந்தித்து புதுவைக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களையும், தமிழர்களையும் சந்தித்து பேசுகிறார். அதோடு சிங்கப்பூரில் செயல்படுத்தப்படும் சுற்றுலா திட்டங்களையும் அவர் பார்வையிடுகிறார். இந்த சுற்றுப் பயணத்தை முடித்து வருகிற 10-ந் தேதி நாராயணசாமி மீண்டும் புதுவை திரும்புவார்.