ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), சென்னை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவைகளை வழங்கி வருகிறது. வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய நான்கு நாட்களில் மட்டும் விமான சேவைகளை வழங்கி வருகிறது.
ஜன.8- ல் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், இருமுடி திருவிழா!
இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரு மார்க்கத்திலும் பயணிகள் ஆர்வத்துடன் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.