தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், விக்ரம் பிரபு, பிரபு, சரத்குமார், பார்த்திபன், கார்த்திக், பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இன்று (ஏ ப்.28) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ அஷ்டலட்சுமி மஹா யாகம்!
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ‘பான் இந்தியா’ திரைப்படமாக வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் இதுவரை இல்லாத வகையில் சுமார் 29 பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. காலை முதலே சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் தங்களது குடும்பத்துடன், திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதுவரை எந்த திரைப்படத்திற்கும் இந்த அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
மே 3- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!
சிங்கப்பூரில் தமிழ் படத்திற்கு அதிகபட்ச கட்டணம் வசூலிக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன் 2 என்று கூறுகின்றனர் தமிழர்கள். எந்தெந்த திரையரங்குகளில் ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெளியாகியுள்ளது என்பது தொடர்பான பட்டியல் மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.