பொன்னியின் செல்வன் பாகம்- 2 எப்போது வெளியாகிறது?- அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம்!

Video Crop Image

பொன்னியின் செல்வன் பாகம்- 2 திரைப்படம், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 28- ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு டிசம்பர் 28- ஆம் தேதி அன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை லைகா நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 30 விநாடிகள் கொண்ட பொன்னியின் செல்வன் பாகம்- 2 திரைப்படத்தின் வீடியோவைப் பதிவிட்டு, உறுதிப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூருக்கு வர்றீங்களா? – மொதல்ல இத தெரிஞ்சுக்கோங்க! இதெல்லாம் கொண்டுவர அனுமதி கிடையாது!

பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள, இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்தபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

36 ஆண்டுச் சிறை வாழ்க்கை ! – இவ்ளோ பில்லியன் வெள்ளி நஷ்டத்தை ஏற்படுத்தி மோசடி செய்தால் இதுதான் கதி!

பொன்னியின் செல்வன் பாகம்- 1 திரைப்படம், கடந்த செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி அன்று வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படம் சுமார் 400 கோடிக்கு மேல் ஃபாக்ஸ் ஆபிஸில் வசூலானதாக தகவல் கூறுகின்றன.