நவம்பர் 7- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இக்கோயில் 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது. நாள்தோறும் 100- க்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

‘மதுரை, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!’

விஷேச நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயில் நிர்வாகம் இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board) கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வரும் நவம்பர் 7- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று இரவு 08.30 மணி முதல் பௌர்ணமி பூஜை நடைபெறும். பூஜையில் ஸ்ரீ மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெறும். இந்த நிலையில், இக்கோயிலில் அடுத்தாண்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால், அதற்கான புனரமைப்பு பணிகள் கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 12- ஆம் தேதி வரை பால்குடம் செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

இலவசமாக இறால் வடை! -ஆனால் ஒருத்தருக்கு ஒரு வடைதான்! பூன் லேயில் கடைத் திறப்பு விழா

பக்தர்கள் அர்ச்சனை மற்றும் பிரசாதங்களை கோயில் அலுவலகத்திலோ (அல்லது) http://smt.org.sg/ என்ற கோயில் இணையதளத்திலோ வாங்கிக் கொள்ளலாம்.

கோயிலில் பக்தர்கள் அமர்ந்து பௌர்ணமி வழிபாட்டை பார்வையிடலாம். இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.