சிங்கப்பூரில் தனியார் வீட்டு விநியோகம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அரசாங்க நில விற்பனை திட்டத்தின் கீழ் தனியார் வீட்டு வினியோகம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் 2785 வீடுகள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் ஆண்டின் இரண்டாம் பாதியில் 3505 வீடுகள் வினியோகிக்கப் பட்டுள்ளது. இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 25.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சிங்கப்பூரின் நகர மறுசீரமைப்பு ஆணையத்தால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி மரீனா சவுத் பகுதியில் வீடுகள் எழுப்பப்பட உள்ளது. மரீனா சவுத் வட்டாரத்தில் வீடுகளோடு அலுவலகம், ஹோட்டல், சில்லரை கடைகள் போன்றவை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க விற்பனை திட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட தளங்களில் சுமார் 7310 தனியார் வீடுகளை கட்டலாம். அவற்றிலேயே 530 ஹோட்டல் அறைகளை கட்டுவதற்கான இடமும், 94,750 சதுர மீட்டர் தரை பகுதியும் இருக்கும்.
தங்களது நில பயன்பாட்டை அதிகரிக்க விரும்பும் சொத்து மேம்பாட்டாளர்களுக்கு அருமையான வாய்ப்பாக இது அமையும் என்று சொத்து நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் கேத்தரின் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் 5 தனியார் வீடமைப்பு தளங்கள் உள்ளன. வர்த்தகம் மற்றும் குடியிருப்புக்கு தலா ஒரு தளம் இடம் பெற்றிருக்கும். மேலும் ஒரு எக்ஸிக்யூட்டிவ் கொண்டோமினிய தளமும் இதில் அடங்கும் என்று கூறப்படுகிறது.