சிங்கப்பூரில் சிறுமியின் குடலைத் துளைத்த குண்டு – வெட்­டி­யெ­டுக்க வேண்­டி நிலைக்கு தள்ளிய சோக சம்பவம்!

ஒரு­வ­கை­யான சிறிய காந்­தப் பந்­து­கள், சிங்கப்பூரில் 9 வயது சிறுமியின் குட­லைக் கிழித்­துள்­ளன.

காந்த பந்­து­களை விழுங்கிய சி­றுமி, அதனை யாரிடமும் கூறவில்லை. விழுங்கி இருப்­பதை யாரும் அறிந்­தி­டாத நிலை­யில் இரண்டு வாரங்­க­ளா­க அப்படியே இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமி பச்சை நிறத்­தில் வாந்தி எடுத்த போது மருத்­து­வர்­கள் செய்­வ­த­றி­யாது தவித்­த­னர். எக்ஸ்-ரே சோதனை செய்து பார்த்ததில், சிறு­மி­யின் உட­லில் 14 காந்­தப் பந்­து­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

அவை மேலும் வயிற்றில் இருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவற்றை அகற்ற சிறு­மிக்கு அவ­சர அறுவை சிகிச்­சை­யும் செய்­தனர்.

காந்­தப் பந்­து­கள் உரசி உரசி வயிற்று பகுதியில் ஏற்­ப­டுத்­திய சேதத்­தால், சிறு­மி­யின் சிறு குட­லின் இரு பகு­தி­களை வெட்­டி­யெ­டுக்க வேண்­டி­ நிலை உருவானதாக  கூறப்­பட்­டது.

இதை­ய­டுத்து அறுவை சிகிச்­சை­ மேற்கொண்ட தாம்­சன் மருத்­துவ நிலை­யத்­தின் டாக்­டர் நித்து ஜசம், சிறு­மி­யின் தாயார் பிரேம்­சந்த் ஆகிய இரு­வ­ரும் இது­போன்ற விளை­யாட்­டுப் பொருள்­கள் தடை செய்­யப்­ப­ட­வேண்­டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.