சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்த கப்பலில் தீ.. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

PSA Marine boat catches fire in western Singapore port waters
Screengrab/Facebook/Singapore Marine Guide

மேற்கு சிங்கப்பூர் துறைமுகப் பகுதியில் உள்ள Seraya Buoy பகுதியில் இருந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட மாடு.. இணையத்தில் கொதித்து எழுந்த இணையவாசிகள்

கடந்த திங்கள்கிழமை மதியம் 1.20 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.

PSA மரைன் பைலட் கப்பலின் இயந்திர அறையில் தீ பற்றியதாக PSA Marine அமைப்பு தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் பரவி வரும் 59 வினாடிகள் கொண்ட வீடியோவில், அந்த கப்பலில் பற்றி எரியும் தீப்பிழம்புகள் மற்றும் கறுப்பு நிற புகை மூட்டங்களையும் காண முடிந்தது.

புகையை உள்ளிழுத்த காரணத்திற்காக ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக SCDF கூறியது.

தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

101 வயதிலும் உழைத்து உண்ணும் சிங்கப்பூரின் இரும்பு பெண்மணி – உழைக்கும் வர்க்கத்துக்கு ஓர் அழகிய எடுத்துக்காட்டு