பொது போக்குவரத்தில் பிறப்புறுப்பை காட்டிய ஆடவர் – பல முறை அவ்வாறு செய்ததாக புகார்

Google Maps

பொது போக்குவரத்தில் பல முறை தன் பிறப்புறுப்பை வெளி காட்டிய சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 22 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் இந்த சம்பவங்கள் குறித்து காவல்துறைக்கு பல புகார்கள் கிடைத்ததாகவும் அது கூறியுள்ளது.

புரூணையில் உயரிய விருதை பெறவுள்ளார் சிங்கப்பூர் “பிரதமர் லீ”

தொடர் விசாரணைகளின் மூலம், அதிகாரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தை கண்டறிந்தனர், இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) அவர் கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், அந்த ஆடவர் பொதுப் போக்குவரத்தில் குறைந்தது நான்கு தடவை அதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

அவர் மீது இன்று வியாழன் (ஜூலை 14) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

இது போன்ற குற்றத்திற்காக ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் வேலையில் உள்ள தமிழ் ஊழியர்… சொந்த வீட்டில் நடந்த கொடுமை – சோகத்தில் குடும்பம்