இரண்டு நாள் பயணமாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிங்கப்பூர் வருகை தந்துள்ளார். சிங்கப்பூர் விமானப்படையின் சூப்பர் பூமா ஹெலிகாப்டரில் பயணத்தை மேற்கொண்டார்.
சிங்கப்பூர் வந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் ஹெலிகாப்டருக்குள் அமர்ந்திருக்கும் வீடியோ ட்விட்டரில் வெளியானது.
https://twitter.com/DefenceMinIndia/status/1196652937059041280?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1196652937059041280&ref_url=https%3A%2F%2Fwww.indiatvnews.com%2Fnews%2Fworld%2Frajnath-singh-air-sortie-video-singapore-air-force-sembawang-air-base-564826
இதனை அடுத்து, அவர் இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்களின் உரையாடலில் கலந்துகொண்டார். இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்த உரையாடல்கள் இந்த பயணத்தின் முக்கிய சாரம்சமாக கூறப்படுகிறது.
மேலும், இந்த பயணத்தின் போது சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங்கையும் சந்திக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.