இன, மதம் இடையே பகைமையை தூண்டும் கருத்துக்கள்.. சுபாஸ் நாயருக்கு சிறை

சுபாஸ் நாயருக்கு சிறைத்தண்டனை
Pic: File/Today

சிங்கப்பூர் ராப் பாடகரான 31 வயதுமிக்க சுபாஸ் நாயருக்கு இன்று (செப் 5) 6 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சுபாஸ் கோவின் பிரபாகர் நாயர் என்ற அவர், ஜூலை 2019 மற்றும் மார்ச் 2021 க்கு இடையில் இனங்கள் மற்றும் மதங்கள் இடையே பகைமையை தூண்டும்படி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலைகளை பறித்துக்கொள்வதாக சிங்கப்பூர் ஊழியர்கள் அச்சம்

கடந்த ஜூலை மாதம் அவர் மீது இதுபோன்ற நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாயர் தண்டிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளும் யூடியூப் வீடியோவுடன் தொடர்புடையவை.

அதில் அவரும் அவரது சகோதரி Preetipls என்று அழைக்கப்படும் ப்ரீத்தி நாயரும் சேர்ந்து பாடிய பாடலில் சர்ச்சைகள் அடங்கிய வரிகள் இருந்ததாக சொல்லப்பட்டது.

இதனை அடுத்து அவருக்கு இரண்டு வருட நிபந்தனை எச்சரிக்கை காவல்துறையால் வழங்கப்பட்டது.

ஆனால் அதனை பின்பற்றாமல் மீண்டும் அவர் சமூக ஊடகங்களில் பகைமையை தூண்டும்படி கருத்துகளை பதிவிட்டு புண்படுத்தினார்.

இன அல்லது மத குழுக்களுக்கு இடையே தவறான கருத்துக்களை ஊக்குவித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

கோயில் உண்டியலில் ஆயிரக்கணக்கான பணத்தை திருடிய இருவர் – CCTV காட்சிகளில் பகீர்