ஜன.28- ஆம் தேதி அன்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (Sri Srinivasa Perumal Temple) வரும் ஜனவரி 28- ஆம் தேதி சனிக்கிழமை அன்று ரத சப்தமி (Ratha Sapthami) வழிபாடு நடைபெறவுள்ளது. இந்த நாளில் இரவு 08.00 மணிக்கு புஷ்பக விமானத்தில் (Pushpaka Vimanam Ubayam) சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

அந்த மனசுதான் சார் கடவுள்… இலவசமாக பானங்களை வழங்கி மனதைக் கவர்ந்துள்ள மலாய் உணவுக் கடைக்காரர்!

ஜனவரி 28- ஆம் தேதி அன்று காலை 06.00 மணிக்கு சுப்ர பாதம் மற்றும் விஸ்வரூபம் பூஜையும், காலை 07.30 மணிக்கு நித்ய பூஜையும், காலை 08.00 மணிக்கு சூர்ய பிரபை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறவுள்ளது. அதேபோல், காலை 09.30 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடும், காலை 11.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், மதியம் 12.30 மணிக்கு ஹனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடும், மதியம் 01.00 மணிக்கு சக்ரஸ்நானமும், மதியம் 01.30 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 04.30 மணிக்கு நித்ய பூஜையும் நடைபெறவுள்ளது.

‘சென்னை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை குறித்த முழுமையான தகவல்!’

மாலை 05.30 மணிக்கு யானை வாகனத்தில் (கஜ வாகனம்) சுவாமி புறப்பாடும், இரவு 07.00 மணிக்கு அஸ்வ வாகனத்தில் (குதிரை வாகனம்) சுவாமி புறப்பாடும், இரவு 08.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி புறப்பாடும், இரவு 09.30 மணிக்கு ஏகாந்த சேவையும் நடைபெறவுள்ளது. இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு 62985771 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.