தேசிய அளவில் அமைக்கப்பட்ட பணிக்குழு மனநலம் தொடர்பில் சமூக நல்வாழ்விற்கு ஊக்கமளிக்கும் வகையில் மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த மூன்று அம்சங்களாக மனநலச் சேவைகள் கிடைக்கப் பெறும் வழிகளை மேம்படுத்துவதும், இளையர் மனநலத்திற்க்கான ஊக்கத்தை வலுப்படுத்துவதும், பணியிடங்களில் ஊழியர்களுக்கான வளங்களை அதிகரிப்பது ஆகியவை என்றும் கூறப்பட்டுள்ளது.
பணிக்குழுவானது தற்போது கருத்துகளைப் பெறுவதற்காக பொது ஆலோசனையை நடத்தி வருவதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி நாடாளுமன்றதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
சுகாதார மூத்த துணை அமைச்சர் இந்தக் கருதுக்கணிப்பு நடவடிக்கையானது தனது சிபாரிசுகளை மெருகூட்ட பயணப்படும் என்றார்.
மேலும் அது மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பில் தேசிய சிந்தனை உத்திகளை வகுக்கும் என்றும், பணிக்குழுவிற்கு அவை உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.