இந்திய நாட்டின் 73- வது குடியரசுத் தினம் இன்று (26/01/2022) இந்தியா முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் இன்று (26/01/2022) காலை 09.00 AM மணிக்கு நடைபெற்ற விழாவில், இந்திய தூதர் (பொறுப்பு) தேசிய கொடியேற்றினார். அதைத் தொடர்ந்து, விழாவில் சிறப்புரையாற்றினார்.
தொழிற்துறை கட்டிடத்தில் வரி செலுத்தப்படாத 500 அட்டைப்பெட்டி சிகரெட்டுகள் பறிமுதல் – இருவர் சிக்கினர்
இந்த விழாவில் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன், பாடல்களும் இடம் பெற்றிருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய தூதரகத்தின் ‘High Commission of India in Singapore’ என்ற அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மற்ற சமூக வலைதள பக்கங்களிலும் விழா ஒளிபரப்பப்பட்டது. இதில் அனைத்து சிங்கப்பூர் வாழ் இந்திய குடிமக்களும் காணொளி மூலம் விழாவை கண்டு மகிழ்ந்தனர்.
இதனிடையே, சிங்கப்பூர் வாழ் இந்திய குடிமக்களுக்கு இந்திய குடியரசுத் தின வாழ்த்துகளை இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.