கடந்த சனிக்கிழமை இரவு லிட்டில் இந்தியாவில் சுமார் 2,000 பார்வையாளர்களுடன் நடைபெற்ற, அமரகலா தீபாவளி கச்சேரி வண்ண விளக்குகள் நிறைந்த கொண்டாட்டத்தில் தொடர்பு, தகவல் அமைச்சர் S. ஈஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நள்ளிரவின் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மீடியா கார்ப் வசந்தம் கலைஞர்களின் கண்கவர் வாணவேடிக்கை மற்றும் பொழுதுபோக்குகளுடன் உற்சாகமாக நடைபெற்றது. மேலும், தீபாவளி கவுண்டவுனுக்கு தன்னை அழைத்ததற்காக மீடியா கார்ப் மற்றும் லிஷாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இந்த தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சி, ஒளி மற்றும் அமைதியைக் கொடுக்கட்டும் என்று அமைச்சர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறினார்.
இதில் ராஜகுமார் சந்திரா (லிஷாவின் தலைவர்), மெல்வின் யோங் (டான்ஜோங் பகர் GRC.யின் MP.), டெனிஸ் பூவா (மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு கவுன்சிலின் மேயர்), தாம் லோக் கெங் (மீடியா கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி) மற்றும் சபனிதா சண்முகசுந்தரம் (தலைவர், இந்திய பார்வையாளர்கள், இந்திய சமூகம், மீடியா கார்ப்) ஆகியோர் உடன் இருந்தனர்.