சிங்கப்பூர் ஆயுதப்படை வாகனம், டாக்ஸி மோதி விபத்து – இருக்கையில் சிக்கி உயிருக்கு போராடிய ஓட்டுநர்

Taxi driver taken to hospital

பயனியர் சாலை நார்த்தில் சிங்கப்பூர் ஆயுதப்படை (SAF) வாகனம் மற்றும் டாக்ஸி ஆகியவை விபத்துக்குள்ளானது.

நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 8) நடந்த இந்த சம்பவத்தில் 73 வயதுடைய டாக்சி ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் – இறுதியில் விபத்தில் இறந்தது தன் மகன் என்று அறிந்து கதறிய சோகம்

பயனியர் சாலை நார்த் பகுதியில் காலை 10.45 மணியளவில் சாலை போக்குவரத்து விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய டாக்ஸி ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. அதன் பின்னர் ஹைட்ராலிக் உபகரணங்களைப் பயன்படுத்தி அவர் பத்திரமாக மீட்கப்பட்டார் என்று SCDF கூறியது.

அதனை அடுத்து மீட்கப்பட்ட அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நல்வாய்ப்பாக அந்த டாக்ஸியில் யாரும் பயணம் செய்து வரவில்லை.

ComfortDelGro டாக்ஸி ஓட்டுநர் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், அவருக்கு தேவையான உதவிகளை செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூருக்கு வரும் S pass வைத்திருப்பவர்கள் ஊருடன் ஒன்றி வாழ புதிய திட்டம்