முகக்கவசத்தை அணிய சொன்னால் மூக்கில் குத்துவியா! – பயணியின் வன்முறைக்கு வலுக்கும் கண்டனம்!

File Photo Via SBS Transit
சிங்கப்பூரில் நவம்பர் 13 அன்று,SBS பேருந்தில் பயணம் செய்த பயணியை முகக்கவசம் அணியுமாறு எச்சரித்த கேப்டன் பணியில் இருந்தபோது முகத்தில் குத்தப்பட்டார்.பயணி முகத்தில் தாக்கியதில் அவருக்கு மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
SBS Transit நிறுவனம் அதன் முகநூல் பக்கத்தில் சம்பவம் குறித்து தெரிவித்தது.பேருந்தில் பயணிக்கும் மற்ற பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர் ஒரு பயணியிடம் முகக் கவசத்தை அணியச் சொன்னார்.
ஆனால் பயணி மறுத்துள்ளார்.எனவே,பேருந்தின் கேப்டன் ஆடிப் இந்த சம்பவத்தை செயல்பாட்டு மையத்தில் தெரிவித்தார்.அப்போது அந்த நபர் முகக்கவசம் அணிய முடிவு செய்ததாக கூறினார்.

இன்டர்சேஞ்சிற்கு பேருந்து வந்ததும், அந்த நபர் கேப்டன் அடீபை அணுகி முகத்தில் அடித்தார்.காவல்துறையினர் வந்து அவரைக் கைது செய்யும் வரை,பேருந்தில் இருந்த இரண்டு பயணிகள் தாக்கியவரைக் கட்டுப்படுத்த முன்னோக்கிச் சென்றனர்.
காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.பொது மருத்துவமனையில் அதீப் சிகிச்சை பெற்று,இப்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.