சிங்கப்பூரின் Bartley சாலையில் 14 வாகனங்கள் மோதி சாலை விபத்து ஏற்பட்டது.டிசம்பர் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஏற்பட்ட வாகன விபத்தின் காட்சிகள் முகநூல் குழுக்களில் வெளியிடப்பட்டன.இரவு 7 மணியளவில் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலின் போது வாகனங்கள் மோதிக்கொண்டன.
பார்ட்லி மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு எதிரே உள்ள சந்திப்பில் விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.சாலையின் ஒரு பாதையில் கார்கள் பார்ட்லி வயடக்ட் நோக்கிச் சென்றன.தொடர்ச்சியாக 13 வாகனங்கள் பம்பரில் மோதி வரிசையாக நின்றன.
வரிசையாக மோதியதில் கார்களின் முன்பகுதி சேதமடைந்து காணப்பட்டன.சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ் இருந்தது.சம்பவ இடத்தை வாகனங்கள் கவனமாகக் கடந்துச் சென்றதால் பின்னால் வரும் போக்குவரத்து மெதுவாக ஊர்ந்து சென்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்த SCDF (சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை) சாலை விபத்து குறித்து எச்சரித்தது.விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.