ஊழியருக்கு ஒன்னுன்னா சும்மா விட மாட்டோம் ! – ஊழியரை மிரட்டிய மாணவர் கண்டிக்கப்பட்டார்

school student threaten teacher condemn
சிங்கப்பூரில் தனது ஊழியர் ஒருவரை மிரட்டிய மாணவரைக் கண்டித்துள்ளதாக செயின்ட்ஸ் ஆண்ட்ரூஸ் மேல்நிலைப்பள்ளி தெரிவித்துள்ளது.மாணவரால் மிரட்டப்பட்ட ஊழியரும் அப்பள்ளியில் பணிபுரிபவர்.
ஊழியர்களிடம் மரியாதையின்றி நடந்து கொள்வதை பள்ளி நிர்வாகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் ஊழியரிடம் மரியாதையின்றி நடந்து கொண்ட மாணவர் கண்டிக்கப்பட்டதாகவும் பள்ளி நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது.
தகாத முறையில் நடந்து கொண்ட மாணவரின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு அவர்களுடன் இணைந்து மாணவருக்கு ஆலோசனை வழங்கி அவரை வழிநடத்துவோம் என்றும் பள்ளி தெரிவித்துள்ளது.
மாணவர் ஊழியரை மிரட்டிய 56 வினாடி காணொளி சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.அதில் பள்ளி மாணவர் அங்கு பணிபுரியும் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

மேலும்,இச்சம்பவம் வகுப்பறையில் நடந்துள்ளது.இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவர் ஊழியரைத் தகாத வார்த்தையால் திட்டினார்.அப்போது,தகாத வார்த்தைகளைத் தன்னிடம் பேசக்கூடாது என்று அந்த ஊழியர் கூறுவதும் காணொளியில் பதிவானது.