சிங்கப்பூர் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் பள்ளிச்சீருடை அணிந்த சிறுவர்கள் ஒரு கட்டிடத்திலிருந்து மற்றோர் கட்டிடத்தின் கூரைக்கு தாவும் காணொளி சமூக வலைதளங்களில் தீயாய் பரவிவருகிறது.
டிராமிசு என்ற ஒருவர் இந்த காட்சியை அவரின் அலுவலகத்திலிருந்து கண்டதாக ஸ்டாம்ப் செய்தி தளத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இவர்கள் இதுபோன்று விளையாடுவது மிகவும் பயங்கரமாக உள்ளது, என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற ஆபத்தான செயல்களில் இந்த சிறுவர்கள் ஈடுபடுவது காண்போரை பதைபதைக்கச் செய்கிறது.