கத்தி குத்து மாதிரி கத்திரிக்கோல் குத்து – சிராங்கூனில் இளைஞர் ஒருவர் கைது !

scissors

கத்திரிக்கோலால் தாக்கியதால் 21 வயது இளைஞர் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 3ஆம் தேதி சிராங்கூன் அவென்யூ 4 இல் நடந்துள்ள இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தாக்குதல் நடத்திய நபர் போலீஸார் வருவதற்கு முன்னர் 21 வயது பெண்ணுடன் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். இருப்பினும், போலீஸ் கேமராக்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் உதவியுடன் தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டது.

ஆங் மோ கியோ பிரிவின் SPF அதிகாரிகள், புங்கோலின், நார்த்ஷோர் டிரைவில் உள்ள பல மாடி கார் நிறுத்துமிடத்தில் தப்பிச்சென்ற வாகனம் கைவிடப்பட்டிருப்பதைக் கண்டனர். K-9 பிரிவின் SOC அதிகாரிகளும் புங்கோலில் தப்பிச்சென்ற தம்பதியைத் தேடினர்.

புங்கோல் 17வது அவென்யூவில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மறைந்திருந்த தப்பிச்சென்ற தம்பதியினரை கண்டுபிடித்த போலீஸார் ஐந்து மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக போலீசார் விசாரனையில் தெரிய வந்துள்ளது. ஆபத்தான ஆயுதம் மூலம் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதற்காக அந்த நபர் மீது ஆகஸ்ட் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.