சிங்கப்பூர் வரவிருந்த ஸ்கூட் TR493 விமானம் மோசமான வானிலை காரணமாக நேற்று (அக். 30) இரவு இந்தோனேசியாவின் பாத்தாம் தீவுக்கு திருப்பி விடப்பட்டது.
அந்த விமானம் மலேசியாவில் உள்ள கோத்தா கினாபாலுவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8.43 மணிக்கு புறப்பட்டதாக FlightAware தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக விமானம் பாத்தாமிற்கு திருப்பி விடப்பட்டது. அதற்கு முன்னதாக, அந்த விமானம் இரவு 10.35 மணிக்கு சிங்கப்பூரில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
மேலும் அனைத்து பயணிகளும் ஹங் நாடிம் விமான நிலையத்தில் தங்கினர் என்று பயணிகள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, இரண்டு மணி நேரம் கழித்து விமானம் 12.35 மணியளவில் ஹங் நாடிமிலிருந்து புறப்பட்டு, நள்ளிரவு 1.18 மணிக்கு சிங்கப்பூரில் தரையிறங்கியது.
தடங்கலுக்கு ஸ்கூட் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.