திடீரென மயங்கி மரணித்த 33 வயது மணிமாறன்… 4 மாதங்களுக்கு முன் தான் தந்தையானார்

SDP Youth Leader Passes Away
Facebook Photos

சிங்கப்பூர்: கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த 33 வயதான மணிமாறன் அசோக்குமாருக்கு ஏற்பட்ட திடீர் மரணம் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவன் விளையாட்டு மைதானத்தில் 15 பேருடன் அவர் விளையாடியதாகவும், அப்போது நிலை தவறி மயக்கநிலைக்கு சென்ற அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோருக்கு வேலை: ஓட்டுனர்களுக்கு வரப்பிரசாதம்!

இந்த சம்பவம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் இந்த திடீர் மரணத்துக்கு மாரடைப்பு தான் காரணம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

திரு மணிமாறனுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் திருமணம் நடந்தது, 4 மாதத்துக்கு முன் தான் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அவர் பெற்றோர்கள் மற்றும் இரு சகோதரிகளுடனும் தெம்பனீஸ் பகுதியில் மகிழ்ச்சியாக வசித்து வந்துள்ளார். திரு மணிமாறனின் திடீர் மரணம் அவரின் குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரு மணிமாறன், அனைவரிடமும் நல்ல முறையில் பழக கூடிய இனிமையான மனிதர் என்று அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் (SDP) உறுப்பினரான அவரது மறைவு ஈடுகட்ட முடியாத ஒன்று என அக்கட்சியின் உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

SDP துணைத் தலைவர் பிரையன் லிம், தனது ஆழ்ந்த இரங்கலை தனது பேஸ்புக் பதிவில் மூலம் தெரிவித்துக்கொண்டார்.

திரு லிம் இன்னும் அதிர்ச்சியில் உள்ளதாகவும், பிரிவின் வலியை கடுமையாக உணர்வதாகவும் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கவலை தரும் அறிவிப்பு – இனியும் அதே தான்