இளைஞர்களிடம் காணொளி மூலம் கலந்துரையாடிய அமைச்சர் மாலிகி ஒஸ்மான்!

Photo: Singapore Ministry Of Foreign Affairs Facebook Page

 

ஜாமியா சிங்கப்பூர் இளைஞர் குழு (Jamiyah Singapore Youth Group) ஏற்பாடு செய்திருந்த ஆசியான் இளைஞர் ஒருங்கிணைப்பு விழா இன்று (30/05/2021) காலை காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த விழாவில் சிங்கப்பூரின் பிரதமர் அலுவலக அமைச்சர் பொறுப்புடன், கல்வித்துறை, வெளியுறவுத்துறை ஆகியவற்றுக்கான இரண்டாம் அமைச்சராக உள்ள டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மான் (Dr Mohamad Maliki Osman) கலந்துக் கொண்டார்.

 

விழாவில் அமைச்சர் டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மான் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார். குறிப்பாக, ஆசியானின் முக்கியத்துவம், கொரோனாவுக்கு பிந்தைய உலகம் குறித்து இளைஞர்களிடம் பேசினார். அதேபோல், வலுவான பிராந்திய உறவுகளை உருவாக்குவதிலும், எதிர்கால தலைமுறையினருக்கு நமது பிராந்தியத்தை வடிவமைப்பதிலும் இளைஞர்களின் பங்கு குறித்து விளக்கினார்.

 

சிங்கப்பூர் நாட்டின் அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சர் டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.