வரும் அக்டோபர் 24- ஆம் தேதி அன்று தீபாவளி கொண்டாடப்படுவதையொட்டி (Deepavali Celebration), சிங்கப்பூரில் உள்ள லிசா அமைப்பு (Lisha) பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், போட்டிகளுக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதனால் சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைக் கட்டியுள்ளன என்றே கூறலாம்.
Work pass அனுமதியில் குளறுபடி; அதிரடி அமலாக்க சோதனை… சிக்கிய ஊழியர்கள்
செப்டம்பர் 16- ஆம் தேதி அன்று தீபாவளி ஒளியூட்டு தொடங்கியுள்ள நிலையில், வரும் அக்டோபர் 22- ஆம் தேதி வரை சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில், வரும் அக்டோபர் 1- ஆம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 01.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை லிட்டில் இந்தியாவில் உள்ள போலி @ கிளைவ் தெருவில் ( Poli @ Clive Street) ராதை, கிருஷ்ணன் மற்றும் நரகாசுரன் தத்ரூபமாக வடிவமைக்கப்படுகின்றன. இதனை நீங்கள் அனைவரும் நேரில் வந்து கண்டுக்களிக்கலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம். மேலும், இதற்கு முன்பதிவும் கிடையாது.
ராதை, கிருஷ்ணன் மற்றும் நரகாசுரனுடன் ஒரு செல்ஃபி புகைப்படத்தை எடுத்து 𝟵𝟯𝟵𝟳 𝟯𝟱𝟵𝟮 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்புமாறு லிசா அழைப்பு விடுத்துள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு கவர்ச்சிக்கரமான பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்களுக்கு ஃபேஸ்புக் பக்கத்திற்கு சென்று லிசா என்று குறிப்பிட்டு, அதன் பக்கத்தைப் பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.