செம்பவாங் சாலை மற்றும் Bah Soon Pah சாலை சந்திப்பில் ஏற்பட்ட கார் விபத்தை அடுத்து, 33 வயதான பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பேஸ்புக்கில் பகிரப்படும் காணொளிகளில், அந்த கார் சாலை பக்கவாட்டு பகுதியில் பள்ளத்தில் சொருகி கிடப்பதை காணமுடிகிறது.
பொங்கோலில் இருவரைத் தாக்கி பிடிபட்ட காட்டுப்பன்றி
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதையும் காணமுடிகிறது.
நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக ஸ்டாம்ப் தெரிவித்துள்ளது.
அதை அடுத்து, பெண் ஓட்டுநர், கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
சிங்கப்பூரில் இரண்டாவது குழந்தைக்கு இனி கூடுதல் நிதி உதவி..!