செம்பவாங் பகுதியில் உள்ள கடையில் தீ விபத்து! – மருத்துவமனைக்குச் செல்ல மறுத்த நபர்…

சிங்கப்பூரின் செம்பவாங் பகுதியில் உள்ள ஒரு காப்பி ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீப்பற்றி எரிந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து 30 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்து செம்பவாங் டிரைவ், பிளாக் 313A-இல் ஏற்பட்டதாக செய்தி ஊடகங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திலிருந்த நபர்கள் அளித்துள்ள தகவலின்படி, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைவதற்கு முன்னதாகவே, அங்கிருந்தவர்கள் வெளியேறியுள்ளனர்.

மேலும் தீவிபத்தில் சிக்கி அதிகளவில் புகையைச் சுவாசித்த ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துள்ளார். அதிகாரிகள் நடத்திய விசாரணையின்படி, கடையில் உள்ள அடுப்புப்பகுதியில் தீ பரவியதாகத் தெரியவந்துள்ளது.