சிங்கப்பூர், செம்பவாங்கில் உள்ள God of Wealth சீனக் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை (செப் 18) இரவு தீப்பிடித்தது.
அந்த கோயிலின் புனரமைப்பு பணிக்கு சுமார் ஒரு மில்லியன் வெள்ளி தேவைப்படும் என்று God of Wealth சீனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : செம்பவாங் கோயில் ஒன்றில் தீ – பெரும்பாலான கட்டிடங்கள் தீயினால் பாதிப்பு..!
இந்த சம்பவத்தில் பெரும்பாலான கட்டிடங்கள் தீயினால் பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ள முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், தீயினால் கோவில் கட்டடத்தில் ஏற்பட்ட சேதம் கண்டறியப்பட்டதன் பிறகு, இந்த மறுசீரமைப்பு பணிக்கான செலவு மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சீரமைப்பு பணிக்காக கோவில் நிர்வாகம் பக்தர்களை நாடியுள்ளது, அவர்களை நன்கொடை வழங்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை இந்த பணிக்காக சுமார் 20,000 வெள்ளி திரட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த பணிகளுக்குப் பிறகு விரைவில் கோவிலை மீண்டும் திறக்கும் என்று நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூர்வாசிகள் அனைவருக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய 2 இலவச முகக்கவசங்கள்..!