செம்பவாங் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – இருவர் மருத்துவமனையில்… 80 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

Sembawang PAB catches fire
SCDF/FB

செம்பவாங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்று (ஜூலை 9) நள்ளிரவு 1:40 மணியளவில் பிளாக் 508A வெலிங்டன் சார்கிளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) Facebook பதிவில் கூறியுள்ளது.

சுற்றுலா பேருந்து கோர விபத்து: இருவர் மரணம் – மூன்று பேர் படுகாயம்.. 15 பேர் மருத்துவமனையில்

பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்த நான்கு பேர் SCDF வருகைக்கு முன்பே வெளியேற்றப்பட்டனர்.

அதில் இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பிளாக்கில் இருந்து சுமார் 80 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், படுக்கையறையில் சார்ஜ் போடப்பட்டு இருந்த PAB சாதனத்தில் இருந்து தீ ஏற்பட்டிருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

நிறுவனத்தின் அலட்சியம்… பறிபோன அப்பாவி ஊழியரின் உயிர் – MOM கடும் நடவடிக்கை