செப்காங் எச்டிபி தொகுதியின் அடிவாரத்தில் இறந்து கிடந்த பெண்; காவல்துறையினர் விசாரணை.!

(photo: mothership)

செங்காங்கில் உள்ள எச்டிபி தொகுதியின் அடிவாரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி 25 வயது மதிக்கத்தக்க சிங்கப்பூர் பெண் ஒருவர் அசைவின்றி கிடந்தார்.

காவல்துறையினர் அளித்த தகவலின்படி, ஜூன் 23 அன்று காலை 9:02 மணியளவில் பிளாக் 106 ரிவர்வேல் வாக்கில் இருந்து சம்பவம் தொடர்பான அழைப்பு வந்ததாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கட்டிடத்தின் அடிவாரத்தில் அசைவின்றி கிடந்ததைக் கண்டதாகவும், மேலும் ஒரு துணை மருத்துவர் அவரை சோதித்து பார்த்து அவர் இறந்துவிட்டார் என உறுதி செய்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.