இளம்பெண் ஒருவரை கடுமையாக தாக்கிய மூன்று டீன்ஏஜ் பெண்கள் கைது – வீடியோ வைரலானதால் அதிரடி

sengkang-teen-girls-arrested-assault

செங்காங்கில் உள்ள அடுக்குமாடி கார் பார்க்கிங்கில் நேற்று (ஆக.18) இளம்பெண் ஒருவரை தாக்கியதாக மூன்று டீன்ஏஜ் பெண்களை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதாவது 15 வயதுடைய மூன்று பெண்கள் தவறான இந்த செயலுக்காக கைது செய்யப்பட்டனர்.

சாலையில் செல்லும் ஆண்களிடம் விலை பேசும் பெண்கள்… தகாத உறவுக்கு அழைப்பு – சிக்கிய 6 பேர்

தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பிளாக் 269 காம்பஸ்வேல் லிங்கின் அடுக்குமாடி கார் பார்க்கிங்கில், கடந்த செவ்வாய்கிழமை இரவு சுமார் 9:25 மணியளவில் அந்த பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது.

பெண் காயமடைந்தார் என்றும், ஆனால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அதன் பிறகு அவர் மருத்துவ உதவியை நாடினார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

“இதில் சம்பந்தப்பட்ட பெண்கள் ஒருவருக்கொருவர் முன்னர் தெரிந்தவர்கள் என்றும் நம்பப்படுகிறது”.

மேலும், விசாரணைகள் நடந்து வருகின்றன என்று போலீசார் தெரிவித்தனர்.

கனரக லாரியில் இருந்து கீழே விழுந்த சரக்கு… கார் மீது மோதி விபத்து