வீட்டை உடைத்து S$30,000 மதிப்புள்ள 4 மதுபாட்டில்களை திருடிய மூவர்.. ஐந்து மணி நேரத்திற்குள் அதிரடி கைது

வெளிநாட்டு ஊழியரை

சென்டோசா கோவ் வீட்டை உடைத்து சுமார் S$30,000 மதிப்புள்ள நான்கு மதுபாட்டில்களை திருடியதற்காக இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

அதாவது 25 மற்றும் 36 வயதுக்குட்டப்பட்ட அந்த மூவரும் நேற்று செவ்வாய்கிழமை (ஜூலை 19) Treasure Island தீவில் உள்ள வீட்டுக்குள் அதிகாலை வேளையில் அத்துமீறி நுழைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

“சிறுநீர், மலம் கழிக்க கூட என் மகன் தான் உதவி” – 22 ஆண்டுகளாக தாயை கவனித்து வந்த மகன் தூக்கத்திலேயே மரணம்… வங்கிக் கணக்கில் $6 மட்டுமே; எனக்கு இனி யார் இருக்கா? கண்ணீருடன் தாய்

இது குறித்து அதிகாலை 4.20 மணிக்கு புகார் கொடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் குறித்து புகார் வந்த ஐந்து மணி நேரத்திற்குள் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

அந்த குடியிருப்பு அமைப்பு சுமார் 19 சொகுசு பங்களாக்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் முழுவதும் நள்ளிரவில் வெளுத்துவாங்கிய கனமழை: சில்..சில்! கூல்..கூல்!! கிளைமேட் – பொதுமக்கள் மகிழ்ச்சி!