சிராங்கூன் சென்ட்ரலில் சண்டையிட்டுக் கொண்ட 33 மற்றும் 47 வயதுடைய ஆடவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று டிசம்பர் 5, மதியம் 12:30 மணியளவில் பிளாக் 254 செராங்கூன் சென்ட்ரலில் நடந்த சண்டை குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) உறுதிப்படுத்தியது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி, மதுரை வந்த இருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு இல்லை!
இந்த சம்பவத்தில் இருவரும் சண்டையிட்டு கொள்ளும் ஆறு வினாடி காணொளி இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.
அருகில் இருந்த ஒரு பெண் மட்டும் மாண்டரின் மொழியில் “சண்டை வேண்டாம்!” என்று கூற, மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதி – முதற்கட்ட பரிசோதனையில் Omicron என தகவல்