செராங்கூனில் பெண்ணை மானபங்கம் செய்ததாக 38 வயது ஆடவர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து புகார் கிடைத்ததாக நேற்று (ஆகஸ்ட் 24) போலீசார் தெரிவித்தனர்.
சிங்கப்பூர் பயணிகள் கவனத்திற்கு – உங்கள் பயணத்தை மேலும் இலகுவாக்கும் நடவடிக்கை
சிராங்கூன் நார்த் அவென்யூ 1ல் லிப்டிற்குள் அடையாளம் தெரியாத ஆடவரால், அந்தப் பெண் மானபங்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின் மூலம், அதிகாரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தை கண்டறிந்தனர்.
அதாவது புகார் கிடைத்த இரண்டு மணி நேரத்திற்குள் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவர் மீது இன்று (ஆகஸ்ட் 25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், அல்லது பிரம்படி அல்லது அத்தகைய தண்டனைகளின் கலவையாகவும் விதிக்கப்படலாம்.