சிங்கப்பூர் திரும்பும் சிங்கப்பூரர்கள் மற்றும் மற்ற குடியிருப்பாளர்களுக்கு இது தேவை – சுகாதார அமைச்சரின் பிப். 6 அப்டேட்!

சாங்கி விமான நிலையத்தில் நடப்புக்கு வந்த புதிய சோதனை.. பிடிபட்ட பயணிகள் பலருக்கு அபராதம்

சிங்கப்பூர் திரும்பும் சிங்கப்பூரர்கள் மற்றும் மற்ற குடியிருப்பாளர்களுக்கான தேவை குறித்து நேற்று பிப். 6ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது பேசப்பட்டது.

அதில், அவர்களுக்கு SG வருகை அட்டை அவசியம் என்றும், நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் பேசினார்.

சிங்கப்பூர் திரும்பும் சிங்கப்பூரர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான SG வருகை அட்டைகளை சுகாதார அமைச்சகம் (MOH) மதிப்பாய்வு செய்யுமா என்று நாடாளுமன்ற உறுப்பினர், ஓங்கிடம் கேள்வி எழுப்பினார்.

பொது சுகாதார கண்காணிப்பு முயற்சிகளுக்கு உதவ அது போன்ற தகவல்கள் போதுமானதாக உள்ளதா என்றும் அவர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஓங், SG வருகை அட்டையின் முதன்மையான நோக்கமே நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதாகும் என்று பதிலளித்தார்.